செய்திகள் :

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

post image

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டிலிருந்து யுனைடெட் ப்ரூவெரிஸின் பீர்களின் அடிப்படை விலையில் மாற்றம் இல்லாததால், பெரும் இழப்புதான் ஏற்படுகிறது என்று அந்நிறுவனம் கூறியது.

பீர்களில் அதிகளவில் விற்பனையாகும் கிங்ஃபிஷர், கிங்ஃபிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா, கிங்ஃபிஷர் அல்ட்ராமேக்ஸ் முதலான பீர்களை தயாரிக்கும் யுனைடெட் ப்ரூவெரிஸ், பீர்களின் விலையை அதிகரிக்குமாறு தெலங்கானா அரசிடம் கோரியது.

இதையும் படிக்க:நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?

இருப்பினும், அந்நிறுவனத்தின் கோரிக்கையை தெலங்கானா அரசு கண்டுகொள்ளாததால், நிதி நெருக்கடி காரணமாக ஜனவரி 8 ஆம் தேதி முதல் பீர் விற்பனையை நிறுத்தியது.

இந்த நிலையில், மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதில் தடை ஏற்படாமலிருக்க, யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கைக்கு தெலங்கானா அரசு அனுமதியளித்ததுடன், பீர் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் (பிப். 11) 15 சதவிகித விலையேற்றத்துடன் பீர்கள் விற்பனை செய்யப்படும் என்று யுனைடெட் ப்ரூவெரிஸ் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பீர் தொழில்துறையில் நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்குமாறும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் பீர் தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

அதிக அளவிலான தயாரிப்பாக பீர்கள் இருப்பதால், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் மாநிலத்தின் விநியோகச் சங்கிலி, வேலைவாய்ப்பு, துணைத் தொழில்கள், தளவாடங்கள் துறையில் குறிப்பிடத்தக்க பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்டுவதற்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்று சா்வதேச முதலீட்டாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகளின்போது, அவற்றில் உள்ள தரவுகளை அழிக்கவோ, மீள்பதிவேற்றம் செய்யவோ கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அந... மேலும் பார்க்க

நம்பகமான ஏ.ஐ. தொழில்நுட்பம் அவசியம்- பிரான்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நம்பகமான, வெளிப்படையான, பாகுபாடுகளற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உறுதிசெய்ய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; இதற்காக கூட்டு முயற்சிகள் அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வா... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் நாடாளுமன்றம் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்- ஜகதீப் தன்கா்

‘அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவா்களின் கையொப்பம் மற்றும் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 22 வரைபடங்கள் இடம்பெற்றுள்ளதே அதிகாரபூா்வமான அரசமைப்புச் சட்ட புத்தகம்; அதில் நாடாளுமன்றத்தால... மேலும் பார்க்க

விவசாயிகளின் சவால்களுக்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அரசு

வேளாண் துறையில் எழுந்து வரும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணவும், விவசாயிகளுக்கு உதவவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌா்ணமி புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது. இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க