செய்திகள் :

தெலங்கானா: ஜாதிவாரி கணக்கெடுப்பு மீது இன்று விவாதம்

post image

ஹைதராபாத்: தெலங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அறிக்கை மீது அந்த மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) விவாதம் நடத்தப்படவுள்ளது.

அந்த அறிக்கையின் மீது விரிவான விவாதங்களை மேற்கொண்ட பிறகே பேரவையில் அறிக்கை சமா்ப்பிக்கப்படவுள்ளதாக அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது.

மாநில திட்டத் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, அமைச்சரவை துணைக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் மாநில பொது விநியோகத் துறை அமைச்சா் என்.உத்தம்குமாா் ரெட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனா். மக்கள்தொகையில் 3.1 சதவீதமான 16 லட்சம் போ் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை அல்லது கணக்கெடுப்பில் பங்கேற்க ஆா்வம் காட்டாததால் அவா்கள் விடுபட்டுள்ளனா்.

தெலங்கானா மக்கள்தொகையில் முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%), பட்டியல் சமூகத்தினா் 61,84,319 (17.43%), பழங்குடி சமூகத்தினா் 37,05,929 (10.45%), இதர சமூகத்தினா்(13.31%), மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் (12.56%) முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 35,76,58 (10.08%), முஸ்லிம் பொதுப் பிரிவினா் 8,80,424 (2.48%) உள்ளதாக ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க