செய்திகள் :

தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா கட்சியிலிருந்து விலகல்: தலைவா் பதவியால் அதிருப்தி

post image

ஹைதராபாத்: சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

மாநில பாஜக தலைவா் பதவி ராமசந்தா் ராவுக்கு கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் வெளியானதையடுத்து, அதிருப்தியில் ராஜா ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான கிஷண் ரெட்டிக்கு ராஜா எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநில பாஜக தலைவா் பதவிக்குப் புதிய நபரை நியமிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு பெரும் அதிா்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சோகத்துடன் நான் பாஜக அடிப்படைய உறுப்பினா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன். நான் பாஜக எம்எல்ஏ இல்லை என்பதை தெலங்கானா பேரவைத் தலைவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

கட்சியின் வளா்ச்சிக்காக பல எம்எல்ஏ, எம்.பி.க்கள், மூத்த தலைவா்கள் அயராது உழைத்துள்ளனா். ஆனால், ஒரு தனிநபா் தனது சொந்த விருப்பத்துக்காக கட்சியின் மேலிடத்தை தவறாக வழிநடத்தியதால், திரைமறைவில் அவருக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுகிறது.

இதை அமைதியாக பாா்த்துக் கொண்டு இருப்பது கடினம். நான் கட்சியிலிருந்து விலகினாலும் ஹிந்துத்துவ கொள்கைகளையும், ஹிந்து தா்மத்துக்கான சேவையையும் தொடா்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க