செய்திகள் :

தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

post image

தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில்,

தெலங்கானாவில் கட்சியின் சித்தாந்த மற்றும் நிறுவன அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிக்குப் பிறகு, ராம்சந்தர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்கும், மாநிலத்தில் அடிமட்ட தொடர்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தெளிவான நோக்கத்தைக் குறிக்கிறது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மூத்த தலைவரான ராமசந்தர் ராவ், சித்தாந்த தெளிவு, சட்ட நுண்ணறிவு மற்றும் பல ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்டவராவார். பாஜகவில் ராவ் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார், அவற்றில் பிஜேஒய்எம் செயலாளர், நகரப் பிரிவு துணைத் தலைவர், சட்டப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர், தேசிய சட்டப் பிரிவு உறுப்பினர், மாநில பொதுச் செயலாளர் மற்றும் கட்சி செய்தித் தொடர்பாளர் ஆகிய பதவிகள் அடங்குவர்.

பாஜக தெலங்கானா பிரிவு தேசியத் தலைமை, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் முடிவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

ராம்சந்தர் ராவ் தலைமையில், கட்சி புதிய மைல்கல்லை எட்டவும், தெலங்கானா மக்களுடனான தொடர்பை ஆழப்படுத்தவும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையில் இணைந்த போர்க் கப்பல் ஐஎன்எஸ் தமால்!

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருநாட்டு கடற்படை அதிகாரிகள் முறையா... மேலும் பார்க்க

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இளநிலை நீட் மறு தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

இளநிலை நீட் மறு தேர்வு எழுதிய குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.இதனையடுத்து, நா... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்டநெரிசல்: பெங்களூர் கூடுதல் ஆணையரின் பணியிடை நீக்கம் ரத்து!

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விவகாரத்தில் பெங்களூர் கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் கடந்த 2019-ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில், கடந்த ஜூன் 23-ஆம் தேதி அவருக்கு ... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு சம்பவம்! நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் 900 அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி கீழே வந்துள்ளது. எனினும், விமானிகள் மீண்டும் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த சம்பவம் த... மேலும் பார்க்க

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய... மேலும் பார்க்க