செய்திகள் :

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: சேதங்களை மதிப்பீடு செய்த ஈரான்!

post image

ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது.

மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ஈரான் செய்தித் தொடர்பாளர் ஃபாதேமெ மொஹஜெரானி,

ஈரானின் ஃபார்டோ, இஸ்ஃபஹான், நாதன்ஸ் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த அணுசக்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவை கடுமையான சேதமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும் ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையின் தரவுகளை குறிப்பிட்டுப் பேசினார். அதில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்தவர்கள் 935 பேர் கொல்லப்பட்டனர். இதில் 38 குழந்தைகளும் 102 பெண்களும் அடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி உற்பத்தியை அழிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அழிக்கும் நோக்கத்தில் ராணுவ தளபதிகள், அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகளை குறிவைத்து எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தியதாகவும், அச்சத்தையும் அழுத்தத்தையும் கொடுப்பதற்காகவே இதனைச் செய்ததாவும் குறிப்பிட்டார்.

ஈரானில் அணுசக்தி உற்பத்தி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், அதனை அழிக்கும் நோக்கத்தில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 12 நாள்கள் நீடித்து வந்த போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க உயரதிகாரிகள் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஜெர்மனி யூதர்களை உளவுப் பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!

ஈரான் உளவுத் துறைக்காக ஜெர்மனி நாட்டிலுள்ள யூதர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டென்மார்க் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அலி எஸ், எனு... மேலும் பார்க்க

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும்! - மஸ்க்கிடம் டிரம்ப் கறார்

கடையை மூடிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும் என்றும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகின் பணக்காரர் வரிசையில் முன்னணியில் உள்ள ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா பயணம்! 7 மாதங்களில் 3வது முறை..!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரான... மேலும் பார்க்க

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா... மேலும் பார்க்க

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024... மேலும் பார்க்க

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க