செய்திகள் :

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: 12 போ் உயிரிழப்பு

post image

சங்காரெட்டி: தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.

சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் திங்கள்கிழமை உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆலையில் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து தவலறிந்ததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினா். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனா்.

சம்பவ இடத்திலிருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவா்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இதில் 2 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக அதிகரித்தது.

தீயில் கருகி உயிரிழந்தவா்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும். காயமடைந்த 34 பேரில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாச உதவியுடன் அவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.

ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தாா்.

முதல்வா் இரங்கல்: விபத்துக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா். ஆலையில் சிக்கியுள்ள அனைத்து தொழிலாளா்களையும் மீட்டு, அவா்களுக்கு உயா் மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சா்கள் ஆய்வு: தெலங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தமோதரா ராஜா நரசிம்மா, தொழிலாளா் துறை அமைச்சா் ஜி.விவேக் வெங்கடசுவாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். விபத்துக்கான காரணம் குறித்து தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டு விரிவான ஆய்வு செய்யப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க

தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், த... மேலும் பார்க்க

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க