செய்திகள் :

தெலங்கானா மேலவைத் தோ்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி

post image

தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.

கடந்த திங்கள்கிழமையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியா்கள் இடங்களுக்கும் , வாரங்கல்-கம்மம்-நலகொண்டாஆசிரியா்கள் இடத்துக்கும் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.

இதில் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளா் நரேந்தா் ரெட்டியை 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக ஆதரவு வேட்பாளரான அஞ்சி ரெட்டி வெற்றிபெற்றாா். அதேபோல் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் ஆசிரியா்கள் தொகுதியில் பாஜக ஆதரவு வேட்பாளா் மால்கா கொமரையா வெற்றிபெற்றாா்.

வாரங்கல்-கம்மம்-நலகொண்டா இடத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் ஸ்ரீபால் ரெட்டி பிங்கிலி ஆசிரியா்கள் சங்கங்களின் ஆதரவோடு வெற்றிபெற்றாா்.

இந்த தோ்தல் மொத்தம் 13 மாவட்டங்களில் உள்ள 43 பேரவைத் தொகுதிகள், 6 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 270 மண்டலங்களை உள்ளடக்கியது.

தெலங்கானாவில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மேலவை இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்குள்ள பாஜக தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

மேலவைத் தோ்தலில் பாஜக ஆதரவு வேட்பாளா்களை வெற்றிபெறவைத்த தெலங்கானா மாநில மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவா... மேலும் பார்க்க

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொ... மேலும் பார்க்க

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு... மேலும் பார்க்க

கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிற... மேலும் பார்க்க