செய்திகள் :

தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?

post image

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 44.

கோவாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடலைக் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான கே.பி. செளத்ரி, ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் (தெலுங்கு) தயாரிப்பாளராவார். இவர் கோவாவின் சியோலிம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி அவரின் உடலை மீட்டதாக காவல் துறை கண்காணிப்பாளர் அக்‌ஷத் கெளஷல் தெரிவித்துள்ளார்.

காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செளத்ரி வீட்டிற்கு விரைந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையதாக கே.பி. செளத்ரியை சைத்ராபாத் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க | 2024-இல் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்

“உங்கள் மன அமைதியைக் குலைத்ததற்கு…” ராகுல் காந்தியின் பேச்சால் பரபரப்பு!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?679e240dc9afcbb7ca5dad88/67a0bcc631cb129377abbbfc/thumbnail-1-... மேலும் பார்க்க

பல மொழி சின்னதிரைகளில் நடிப்பது சிறந்த அனுபவம்: செளந்தர்யா ரெட்டி!

பல மொழிகளின் சின்னதிரை தொடர்களில் நடிப்பது சிறந்த அனுபவம் என நடிகை செளந்தர்யா ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பிறந்திருந்தாலும் கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் தொடர்களிலும் ச... மேலும் பார்க்க

மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிரு... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத... மேலும் பார்க்க

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.தஞ்சாவ... மேலும் பார்க்க