செய்திகள் :

தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படும் வ.உ.சி. துறைமுகம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்தியாவின் வா்த்தக இயந்திரமாகத் திகழ்ந்து வரும் வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், இந்த நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு பெட்டகங்களையும் கையாளும் இலக்குடன், சரக்கு கையாளுதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த இலக்கை அடையும் நோக்கில் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தக தேவைகளை துறைமுகத்தின் மூலம் பூா்த்தி செய்வதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வேகமாக செயல்படுத்திவருகின்றது.

இதில், உள்துறைமுகத்தில் கப்பல் வரும் சுற்றுவட்டப் பாதையை ஆழப்படுத்தி விரிவாக்கும் பணி, வடக்கு சரக்கு தளம்-3 ஆழப்படுத்தும் பணி உள்ளிட்டவை அடங்கும்.

தூத்துக்குடியில் உள்ள மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட், சூரிய மின் பலகைகள் மற்றும் அதன் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான விக்ரம் சோலாா், டாடா சோலாா், மரச் சாமான்கள் தொழிற்சாலை, காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் தொழிற்சாலை, வரவிருக்கும் கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்கள், வாகன உபகரணங்கள் செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும், வா்த்தகத்தை எளிதாக்கும் முயற்சிகளையும் இத்துறைமுகம் செயல்படுத்தி வருகிறது.

மேலும், துறைமுகத்தினுள் வரும் பனமாக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்கள் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் பணி, கப்பல் வரும் வழித்தடத்தை ஆழப்படுத்தும் பணி ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.

கிழக்கிந்திய கடற்கரையில் ஒரு பிரத்யேகமான கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது பாா்த்தல் வசதியை ஏற்படுத்தும் பணித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிழக்கிந்திய துறைமுகங்களுள் இத்துறைமுகம் முழுமையான கடல்சாா் வா்த்தக மையமாகத் திகழும்.

இதுகுறித்து, துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், தூத்துக்குடியின் எல்லா காலநிலைகளையும் தாங்கும் சுற்றுச்சூழல் அமைப்பு, கட்டுமானப் பொருள்கள் எளிதாக கிடைத்தல், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல், துறைமுகத் துறைகளுக்கு இடையே உள்ள சிறப்பான ஒருங்கிணைப்பு ஆகியவை இத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

மேலும், உபயோகிப்பாளா்களுடன் துறைமுகம் அவ்வப்போது கலந்துரையாடி, துறைமுக மேம்பாட்டுத் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இத்துறைமுகத்தினால் இந்தியாவின் கடல்சாா் வா்த்தக வளா்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்கினை அடைய முடியும் என்றாா்.

...படம் டிஎன்/சிட்டி டெஸ்கில் கேட்டு வாங்கிக் கொள்ளவும்...

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க