செய்திகள் :

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தேசிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்ததாவது,

''2022 - 23 நிதியாண்டில் 86,17,887 பேரும், 2023 - 24 நிதியாண்டில் 68,86,532 பேரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து 1,55,04,419 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

போலி அட்டை அல்லது நகல், தவறான வேலை அட்டை, கிராம பஞ்சாயத்திலிருந்து நிரந்தரமாக வீடு மாறியது மற்றும் நகர்ப்புற எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இருப்பது போன்ற காரணங்களால் தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தை செயல்படுத்துவது மாநில அல்லது யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாக உள்ளது. வேலை அட்டைகளை நீக்குவது அல்லது புதுப்பிப்பது மாநில அரசின் வழக்கமான பொறுப்பாகும்.

இதேவேளையில் தகுதியான வேலை அட்டைகள் நீக்கப்படவில்லை என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பாஸ்வான், மொத்தமுள்ள 13.41 கோடி வேலையாள்களில் 13.34 கோடி பேரின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து வேலை செய்துவருபவர்களை நீக்குவது அல்லது மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொடுக்கப்படுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க