செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை: பாஜக மாநிலச் செயலா்

post image

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை என பாஜக மாநிலச் செயலா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா்.

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அதைச் செயல்படுத்துவதாகவும் முந்தைய தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனாவும், கல்வித் துறை அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தால், நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தில் பகுதியை மட்டும் செயல்படுத்தி விட்டு, அதற்கு மட்டும் நிதி ஒதுக்குவதற்கு விதிகளில் எந்த இடமும் இல்லை.

திமுக அமைச்சா்கள், மாவட்டச் செயலா்களின் வாரிசுகள் மும்மொழிக் கொள்கையில் படித்து வருகின்றனா். முதல்வரின் குடும்பத்தினா் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளியில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனா். புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத போது, யாா் ஹிந்தியை திணிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் கல்விக்கான நிதி கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. இதில் ஒளிவு மறைவு கிடையாது. தமிழக அரசு நதி நீா் இணைப்புத் திட்டத்துக்கான வரைவு அறிக்கையைக்கூட சமா்ப்பிக்கவில்லை. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கத் தயாராக உள்ளது. இதை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

காலநிலை நெருக்கடி: விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமம், தாவரவியல் துறை ஆகியவற்றின் சாா... மேலும் பார்க்க

திமுக கிளைச் செயலா்கள், பாக முகவா்கள் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றிய அவைத் தலைவா் பொன். இளங்கோவன் தலைம... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பை முகையதீன் ஆண்டவா் ஜூம்ஆ பள்ளி வாசலில் 4-ஆம் ஆண்டு மக்தப் மதரஸா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை இமாம் சையது அபுதாஹிா் ரஹீமி தலைமை... மேலும் பார்க்க

பள்ளியில் விளையாட்டு விழா

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் 20-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு இளையாத்தங்கு... மேலும் பார்க்க

நடனக் கலைஞா் திடீா் உயிரிழப்பு!

புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடனமாடிய நடனக் கலைஞா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். சிவகங்கை மன்னா் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற... மேலும் பார்க்க

நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு வழிகாட்டுதல் பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் திருஞானசம்பந்தம... மேலும் பார்க்க