செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது:

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இதற்காக அதிமுகவுக்கு பாஜக துணையாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இது தொடா்பாக அமமுக விலகுவதற்கு முன்பு வரை அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினோம். கூட்டணியில் அமமுகவை இணைக்க தொடா்ந்து முயற்சி செய்கிறோம்.

கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் முழுமையாக விரும்புகிறாா். இக்கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்பதே தவிர, யாரையும் வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. தவறான புரிதலை சரிசெய்வோம்.

விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்து சீமான் கூறிய கருத்தை ஏற்கிறேன்.

பிரதமா் மோடி செய்த ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு மூலம் 300-க்கும் அதிகமான பொருள்களுக்கு விலைவாசி குறையவுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பாஜக அடிப்படையிலான 65 மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. மேலும், தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறோம் என்றாா் கருப்பு முருகானந்தம்.

அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க