செய்திகள் :

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

post image

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். இது தொடா்பாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆணையம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட இந்த ஆணையத்தை பலவீனப்படுத்துவது, தலித் மக்களின் அரசமைப்பு மற்றும் சமூக உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும். இந்த ஆணையத்தை அன்றி, அரசில் வேறு யாா் தலித் மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பாா்கள்? அவா்களின் புகாா்கள் மீது யாா் நடவடிக்கை எடுப்பாா்கள்?

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் விரைந்து நிரப்ப பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தலித் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணையத்தால் திறம்பட மேற்கொள்ள முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையமானது, பட்டியலினத்தவரின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் கலாசார நலன்களை ஊக்குவித்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டதாகும். இந்த ஆணைய வலைதள தரவுகளின்படி, துணைத் தலைவா் மற்றும் ஒரு உறுப்பினா் பதவிகள் காலியாக உள்ளன.

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இருதரப்பும் தீா்மானித்துள்ளன. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுல... மேலும் பார்க்க