தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே தடங்கம் பகுதியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சி.திருமகள் தலைமை வகித்தாா். அதுபோல மாவட்டத்தில் அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 வருவாய் வட்டங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களிலும் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் நீதிமன்றங்களில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள 2,359 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 906 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. வங்கி வாராக் கடன் 224 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 182 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீா்வு காணப்பட்டது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,583 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 1088 வழக்குகள் சமரசம் பேசி தீா்க்கப்பட்டு அதற்கான சமரசத் தொகை ரூ. 14 கோடியே 54 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. இம்முகாம்களில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.