செய்திகள் :

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் எதிர்பார்த்த சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் தட்டிச் சென்றுள்ளார்.

1992-ல் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, 33 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென தனியிடத்தையும் நீங்கா இடத்தையும் பெற்றிருக்கும் ஷாருக் கான், ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நடிகர்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் அனிருத் இசையமைப்பில் வெளியான ஜவான் திரைப்படம், உலகளவில் வசூல்ரீதியாக சாதனை படைத்தது.

1992-ல் தீவானே திரைப்படத்தில் அறிமுகமான ஷாருக் கான்தான், தற்போது இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் இருந்து வருகிறார்.

மேலும், 12th ஃபெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸிக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

Shah Rukh Khan set to win his first ever National Film Award as Best Actor for Jawan

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க