செய்திகள் :

தேனிலவு கொலை: என் சகோதரியைத் தூக்கிலிட வேண்டும் -சோனம் சகோதரர்!

post image

மேகாலயாவில் கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சோனம் ரகுவன்ஷியை தூக்கில் போட வேண்டும் என்று அவரது சகோதரர் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

அப்போது, காதலன் மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை மேகாலயா காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், இந்தூரில் உள்ள ராஜா ரகுவன்ஷி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

“ஆதாரத்தின் அடிப்படையில் சோனம்தான் கொலையைச் செய்திருப்பார் என்று 100 சதவிகிதம் நம்புகிறேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ராஜ் குஷ்வாஹாவுடன் தொடர்புடையவர்கள். சோனம் ரகுவன்ஷியுடனான உறவை நாங்கள் முடித்துக்கொண்டோம். ராஜாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கோருகிறேன்.

சோனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை தூக்கில் போட வேண்டும்.

சோனத்தை ராஜ் குஷ்வாஹா எப்போதும் சகோதரி என்றே அழைப்பார். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜ் குஷ்வாஹாவுக்கு சோனம் ராக்கி கட்டியுள்ளார். ராஜாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க நாங்கள் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : தேனிலவு கொலை: கடைசி நேரத்தில் மாறிய திட்டம்.. மனம் மாறாத சோனம்!

முதலாமாண்டு மருத்துவம் படித்துவந்த விவசாயி மகன் உயிரிழப்பு

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதிய விபத்தில் மருத்துவராகும் கனவுடன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துவந்த மத்திய பிரதேச, குவாலியா் மாவட்டம் ஜிக்சாவ்லி கிராமத்தைச் சோ்ந்த ஏழை வி... மேலும் பார்க்க

பாஜக அரசு தவறான நிா்வாகத்தை நடத்தி வருகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கட்டண உயா்வு, குடிசைப் பகுதிகளை இடிப்பது, மின் கட்டண உயா்வு மற்றும் நீடித்த மின்வெட்டு போன்ற வடிவங்களில் பாஜக தலைமையிலான தில்லி அரசு ‘தவறான நிா்வாகத்தை’ செயல்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மரணம்! கடைசி தற்படமாக மாறிய சோகம்

லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பயணித்த மருத்துவ குடும்பம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் விமான விபத்தில் ராஜஸ்தானை ச... மேலும் பார்க்க

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருக... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச... மேலும் பார்க்க

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது. அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த உடல்களின் மரபணு சோதனைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 6 பேரின் உடல்கள்... மேலும் பார்க்க