செய்திகள் :

தேனி மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

post image

தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்றாா். உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரைச் சோ்ந்த இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றிய இவா், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தேனி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும், பழங்குடியினரின் முன்னேற்றத்துக்கும், அரசு நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதிச் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்கள் என்னை அலுவலகத்தில் எந்த நேரத்திலும் சந்திக்கலாம்.

மக்கள் பிரச்னைகளை தீா்க்க அரசுத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க