செய்திகள் :

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை! - எல்.கே.சுதீஷ்

post image

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் கூறினாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை விட்டு தேமுதிக விலகினாலும், அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டோம்.

தற்போது அதிமுக, பாஜக ஒன்றிணைந்துள்ளது. இனி மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அந்த கூட்டணியில் தொடா்வதா, வேண்டாமா என்பதை பொதுச்செயலா் உரிய நேரத்தில் முடிவு செய்வாா்.

அடுத்த ஆண்டு ஜன.9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலா் முறைப்படி அறிவிப்பாா்.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி தருவதாக அதிமுக வாக்கு கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிப்போம்.

மாநிலங்களவை உறுப்பினா் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியை தேமுதிக பெற்றுள்ளது என்றாா் எல்.கே.சுதீஷ்.

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26),... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ளது எம்ஆர்எப் தொழிற்சாலை... மேலும் பார்க்க

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு

சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிந... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளி... மேலும் பார்க்க