செய்திகள் :

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

post image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொன்ன நிலையில், தான் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.

அப்போது, உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியல் குறித்து யாருமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்த நிலையில், தான் கொடுத்த பிரமாணப் பத்திரத்துக்கான உறுதிப்படுத்தும் ரசீதையும், பிரமாணப் பத்திரத்தின் நகலையும் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, வாக்குத் திருட்டுப் புகார் அளிப்பவர்கள், அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரியிருந்த நிலையிலும் யாரும் தாக்கல் செய்யவில்லை என்று ஞானேஷ்குமார் கூறியிருந்த நிலையில், அது உண்மையில்லை என்று அகிலேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெற்றதற்காக மின்னஞ்சலில் ரசீதையும் வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக 18 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித... மேலும் பார்க்க

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் ச... மேலும் பார்க்க

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க