செய்திகள் :

தேர்தல் விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு! குடியுரிமை இருந்தால் வாக்களிக்க அனுமதி!

post image

தேர்தல் விதிகளை கடுமையாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அனைவரையும் ஒரு பரபரப்பிலேயே வைத்துள்ளார். இந்த நிலையில், இனி அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் குடியுரிமைச் சான்று கட்டாயம் மற்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே, வாக்குச் சீட்டுகள் கிடைக்கப் பெறுதல் உள்ளிட்ட தேர்தல் விதிகளை கடுமையாக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கு முந்தைய அமெரிக்க அரசு தேர்தல் நடத்துவதில் அடிப்படை மற்றும் தேர்தல் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், மாநிலங்கள் அரசின் கொள்கைகளுக்கு இணங்கத் தவறினால், அரசின் நிதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் விதிகள் மீது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பதால், இந்த உத்தரவு சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் இருந்தே அதிபர் டிரம்ப், தேர்தல் நடைமுறைகள் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார். மேலும், 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தான் தோல்வியடைந்ததற்கும் இந்த மோசடியே காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசா... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் மீண்டும் விற்பனையானது!

எக்ஸ் தளம் மீண்டும் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் அதன் உரிமையாளராக எலான் மஸ்க் என்பதுதான் சுவாரசியமே!எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், அதில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேல்.... மேலும் பார்க்க

ஆபரேஷன் பிரம்மா: மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரணப் பொருள்கள் ஒப்படைப்பு!

புது தில்லி: ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக ச... மேலும் பார்க்க

நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் ச... மேலும் பார்க்க

மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?

மியான்மரில்(பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை ப... மேலும் பார்க்க

டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

கூகுள் மேப்பில் டைம் டிராவல் செய்யும்வகையில் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், ... மேலும் பார்க்க