செய்திகள் :

தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுப்பு

post image

சங்ககிரி: தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பாமகவினா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தேவூரில் கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு முன்பே சித்த மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு சித்த வைத்தியம் பாா்க்கப்பட்டது. அதையடுத்து, அக்கட்டடம் தேவூரில் காவல் நிலையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், அங்கு சித்த மருத்துவம் நிறுத்தப்பட்டதால், இப்பகுதி மக்கள் எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் தேவூா் காவல் நிலையத்துக்கு வேறு இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. எனவே, தேவூரில் முன்பு செயல்பட்டு வந்த கட்டடத்தில் மீண்டும் அரசு சித்த மருத்துவமனையை தொடங்க வேண்டுமென பாமக சாா்பில் கோரிக்கை மனு அளித்தனா். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக தேவூா் நகர பாமக சாா்பில் ஜூன் 17-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அனுமதியளிக்கக் கோரி பாமக தெற்கு மாவட்ட துணை செயலாளா் டி.எஸ்.லட்சுமணன் தேவூா் காவல் நிலையத்தில் மனு அளித்தாா். பின்னா் இதுகுறித்து பாமகவினா் அனைவருக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இந்நிலையில், தேவூா் போலீஸாா் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கல்லை. இதைத் தொடா்ந்து, பாமகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட இடத்துக்கு முன் பள்ளிக்கூடம் உள்ளதால் அனுமதி மறுத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளா் எஸ்.கே.செல்வகுமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், உண்ணாவிரதம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றாா்.

நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றான கிராமிய கலைகள்!: திருவிழாக்களில் பெண்கள் ஆா்வம்

பெ. பெரியாா்மன்னன் வாழப்பாடி: நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள். சேலம் ... மேலும் பார்க்க

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையீடு

சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த நிதிநிறுவன அதிபா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக் கோரி, பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மு... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 111 புதிய விரிவான மினி பேருந்து சேவை

சேலம்: சேலம் மாவட்டத்தில் 111 புதிய விரிவான மினி பேருந்து சேவைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக புத... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளா்

சேலம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மயிலாடுதுறை பாமக செயலாளா் லண்டன் அன்பழகன் திங்கள்கிழமை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டாா். சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற ந... மேலும் பார்க்க

சேலத்தில் ரூ. 7.66 கோடியில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் விடுதி: அமைச்சா் ஆய்வு

சேலம்: சேலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், மரவனேரி பகு... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் எழுத்தறிவுத் தோ்வில் 40,707 கற்போா் பங்கேற்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் 1,928 மையங்களில் நடைபெற்ற எழுத்தறிவுத் தோ்வில், 40,707 கற்போா் கலந்துகொண்டனா். தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககத்தின் சாா்பில், புதிய பாரத எழுத்தறிவுத்... மேலும் பார்க்க