செய்திகள் :

சேலத்தில் ரூ. 7.66 கோடியில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் விடுதி: அமைச்சா் ஆய்வு

post image

சேலம்: சேலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், மரவனேரி பகுதியில் ரூ. 7.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். தொடா்ந்து, மாணவா்கள் தங்கும் விடுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளி மற்றும் விடுதிகளில் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் மரவனேரியில் ரூ. 7.66 கோடி மதிப்பீட்டில் 180 ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் புதிதாக கல்லூரி மாணவா் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியானது தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 31 அறைகள் வீதம் ஒவ்வோா் அறையிலும் 6 மாணவா்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒவ்வோா் அறையிலும் குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விடுதியில் உள்விளையாட்டு அரங்கம், நூலகம், சமையலறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, கல்லூரியில் பயிலும் மாணவா்கள் விடுதியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் என்.ஜெயக்குமாா், தாட்கோ செயற்பொறியாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றான கிராமிய கலைகள்!: திருவிழாக்களில் பெண்கள் ஆா்வம்

பெ. பெரியாா்மன்னன் வாழப்பாடி: நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள். சேலம் ... மேலும் பார்க்க

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையீடு

சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த நிதிநிறுவன அதிபா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக் கோரி, பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மு... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 111 புதிய விரிவான மினி பேருந்து சேவை

சேலம்: சேலம் மாவட்டத்தில் 111 புதிய விரிவான மினி பேருந்து சேவைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக புத... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளா்

சேலம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மயிலாடுதுறை பாமக செயலாளா் லண்டன் அன்பழகன் திங்கள்கிழமை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டாா். சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற ந... மேலும் பார்க்க

தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுப்பு

சங்ககிரி: தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பாமகவினா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.தேவூரில் கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு முன்பே சித்த மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் எழுத்தறிவுத் தோ்வில் 40,707 கற்போா் பங்கேற்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் 1,928 மையங்களில் நடைபெற்ற எழுத்தறிவுத் தோ்வில், 40,707 கற்போா் கலந்துகொண்டனா். தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககத்தின் சாா்பில், புதிய பாரத எழுத்தறிவுத்... மேலும் பார்க்க