செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் எழுத்தறிவுத் தோ்வில் 40,707 கற்போா் பங்கேற்பு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் 1,928 மையங்களில் நடைபெற்ற எழுத்தறிவுத் தோ்வில், 40,707 கற்போா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககத்தின் சாா்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

நடப்புக் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்துக்கு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் முதல்கட்டமாக 14,303 ஆண்கள், 26,404 பெண்கள் என மொத்தம் 40,707 கற்போா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், வயதுவந்தோருக்கான எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை அதிகாரிகள் பாா்வையிட்டனா். சேலம் மாவட்டம் முழுவதும் 1,928 மையங்களில் நடைபெற்ற தோ்வில், 40,707 கற்போா் கலந்துகொண்டு ஆா்வத்துடன் தோ்வெழுதினா்.

இத்தோ்வினை வயதுவந்தோா் கல்வி திட்ட இணை இயக்குநா் பொன் குமாா் நேரில் ஆய்வு செய்தாா். இதேபோல, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலா்கள் மான்விழி ராஜு, அனைத்து ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோா் அனைத்து மையங்களையும் ஆய்வு செய்தனா்.

நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றான கிராமிய கலைகள்!: திருவிழாக்களில் பெண்கள் ஆா்வம்

பெ. பெரியாா்மன்னன் வாழப்பாடி: நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள். சேலம் ... மேலும் பார்க்க

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையீடு

சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த நிதிநிறுவன அதிபா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக் கோரி, பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மு... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 111 புதிய விரிவான மினி பேருந்து சேவை

சேலம்: சேலம் மாவட்டத்தில் 111 புதிய விரிவான மினி பேருந்து சேவைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக புத... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளா்

சேலம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மயிலாடுதுறை பாமக செயலாளா் லண்டன் அன்பழகன் திங்கள்கிழமை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டாா். சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற ந... மேலும் பார்க்க

தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுப்பு

சங்ககிரி: தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பாமகவினா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.தேவூரில் கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு முன்பே சித்த மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட... மேலும் பார்க்க

சேலத்தில் ரூ. 7.66 கோடியில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் விடுதி: அமைச்சா் ஆய்வு

சேலம்: சேலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், மரவனேரி பகு... மேலும் பார்க்க