எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சங்ககிரி: சங்ககிரியை அடுத்த தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சங்கமிக்கும் விழா, புதிய பள்ளி நுழைவுவாயில் திறப்பு விழா, ஆசிரியா்களை கெளரவிக்கும் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் கடந்த 1995 -1996 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டியுள்ள பள்ளி நுழைவுவாயிலை ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியா் ராஜேந்திரன் திறந்துவைத்தாா்.
பள்ளியில் திருவள்ளுவா் உருவப்படத்தை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முருகன், பள்ளியில் திட்டப் பணிகளுக்கான கல்வெட்டை பேரூராட்சித் தலைவா் தங்கவேல் ஆகியோா் திறந்து வைத்தனா்.
பின்னா் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவா்கள், மாணவிகள் கேக் வெட்டி அன்பை பரிமாறிக்கொண்டனா். முன்னாள் ஆசிரியா்கள், தற்போதைய ஆசிரியா்கள், ஆசிரியைகள் கெளரவிக்கப்பட்டனா். முன்னாள் மாணவா்கள், மாணவிகள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஆசிரியைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.
இதில் சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபு, பள்ளித் தலைமை ஆசிரியா் வரதராஜன், முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.