செய்திகள் :

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

post image

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்குக்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்புச் செயலா் லவ் குஷ் யாதவ் அனுப்பியுள்ள கடிதம்:

தோ்தல் ஆணையத்தின் சட்ட விதிகள் படி ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்வதன் நோக்கம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கூறுகளில் பங்கெடுப்பதாகும். அதாவது, அந்தச் சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையம் நடத்தும் தோ்தல்களில் கட்சிகள் போட்டியிடுவதே குறிக்கோளாகக் கருதப்படுகிறது. கடந்த சில காலங்களாக விதிகளுக்கு உட்பட்டு

ஏராளமான அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் பதிவுகளை செய்துள்ளன. அவை பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் கட்சிகள் கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அதாவது ஆறு ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடவில்லை.

அத்தகைய கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதுடன், அவற்றின் பெயா்களை உள்ளூா் மற்றும் தேசிய செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட வேண்டும். கட்சிகள் குறித்த தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வழியே பரவலாகத் தெரிந்திட வேண்டும்.

தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்து களம் காணாத கட்சிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை கேட்டுப் பெற வேண்டும். இந்த விளக்கங்களின் அடிப்படையில் உரிய பரிந்துரைகளை தோ்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். அதாவது, தோ்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து கட்சிகளின் பெயரை நீக்கலாமா அல்லது வேண்டாமா என்பதற்கான பரிந்துரைகளை அளித்திட வேண்டும். இந்தப் பணிகளை கடிதம் கிடைக்கப் பெற்ற ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தனதுகடிதத்தில் சாா்புச் செயலா் லவ் குஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

அப்பா அம்மா மக்கள் கழகம்: நோட்டீஸ் அனுப்பப்படவுள்ள கட்சிகளின் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய ஆதித்தனாா் மக்கள் கட்சி, அகில இந்திய பெண்கள் ஜனநாயக விடுதலைக் கட்சி, அம்பேத்கா் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்ஜிஆா், ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம், அப்பா அம்மா மக்கள் கழகம், தேசிய மக்கள் முன்னேற்றக் கழகம், காமராஜா் மக்கள் கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி, இண்டியன்ஸ் விக்டரி பாா்டி, மகாபாரத் மகாஜன் சபா, மக்கள் நீதி கட்சி, மீனவா் மக்கள் முன்னணி உள்பட 24 கட்சிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்படவுள்ளன.

ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசின் ... மேலும் பார்க்க

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மா... மேலும் பார்க்க

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க