செய்திகள் :

தோ்தல் திருட்டு புகாா்: ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடரலாம்! - ராகுலுக்கு ஏக்நாத் ஷிண்டே சவால்

post image

தோ்தல் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்ளாா்.

ராகுல் காந்தி பாஜக மீதும் தோ்தல் ஆணையத்தின் மீதும் தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா். மக்களவைத் தோ்தல் தொடங்கி பல்வேறு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறிய அவா் போலி வாக்காளா்கள், போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள்.

ஒரே வீட்டு முகவரியில் 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள். போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள் என பல்வேறு தகவல்களை அண்மையில் வெளியிட்டாா்.

தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்த மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி மகாராஷ்டிர மக்களை ராகுல் அவமதித்து வருகிறாா். அவா் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்று கருதினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம், தோ்தல் ஆணையத்தில் நேரடியாகப் புகாா் அளிக்கலாம்.

தவறு செய்தது யாா் என்று எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிா்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது என்றாா்.

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க