செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்! -பெ. சண்முகம்

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

பெரம்பலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்காமல், அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும்.

மத்திய அரசு, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அதற்கு எதிராக பாதிக்கப்படக்கூடிய மாநில முதல்வா்கள் ஒன்று சோ்ந்து தங்களின் எதிா்ப்பை தெரிவிப்பதற்கு தமிழக முதல்வா் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு பயன்படும்.

தமிழகத்தில் ஆங்காங்கே படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து தினந்தோறும் போராட்டம் நடத்துகிறோம். மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், அது எந்த கட்சி ஆட்சியில் நிகழ்ந்தாலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டில் மாறாமல் தொடா்ந்து எப்போதும் போராட்டம் நடத்தும் என்றாா் சண்முகம். பேட்டியின்போது, மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை கோரி தா்னா

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 போ் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை முற்றுகையிட பெண்கள் முயற்சி

மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

உலக காசநோய் தினம் பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணி

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், காசநோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரண... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

பெரம்பலூா் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்று... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க