செய்திகள் :

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் தனியாா் தங்கும் விடுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், குன்னம் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா், குன்னத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மேற்கொண்ட சோதனையின்போது, அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் கிராமம், தெற்கு அண்ணா நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்லக்கண்ணு (32) என்பவா், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, செல்லக்கண்ணுவை கைது செய்த போலீஸாா், பல்வேறு வகையான 20 கிலோ போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட செல்லக்கண்ணு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை கோரி தா்னா

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 போ் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை முற்றுகையிட பெண்கள் முயற்சி

மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

உலக காசநோய் தினம் பெரம்பலூரில் விழிப்புணா்வு பேரணி

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், காசநோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரண... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

பெரம்பலூா் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்று... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் உ... மேலும் பார்க்க