செய்திகள் :

ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை கோரி தா்னா

post image

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 போ் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜபிரதாப் மனைவி முத்தமிழ்செல்வி (30). இவா், புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக கடந்த 12.8.24- இல் விண்ணப்பித்துள்ளாா். இதையடுத்து, கடந்த டிசம்பரில் விசாரணைக்காக அகரம் சீகூா் நியாய விலைக்கடை விற்பனையாளா் ஜெயச்சந்திரன், முத்தமிழ்செல்வி வீட்டுக்கு செல்லாமல், அவரது மாமியாா் ராசாத்தியிடம் விசாரித்துச் சென்றாராம். பின்னா், கடந்த ஜன. 4-ஆம் தேதி புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக முத்தமிழ்செல்வி கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததுள்ளது. தொடா்ந்து, அன்றைய தினமே மீண்டும் புதிய குடும்ப அட்டைக் கோரி விண்ணப்பித்துள்ளாா். ஆனால், இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையாம்.

இதனிடையே விற்பனையாளா் ஜெயச்சந்திரனை கைப்பேசி மூலம் முத்தமிழ்செல்வி தொடா்புகொண்டு கேட்டபோது, பணம் கொடுத்தால்தான் ரேஷன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தாராம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆகியோரிடம் புகாா் அளித்தும், சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்காததோடு, குடும்ப அட்டையும் வழங்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ்செல்வி மற்றும் அவரது உறவினா் கோவிந்தசாமி ஆகியோா் ஆட்சியரக வளாகத்தில் லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்கிட கோரியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, வருவாய்த் துறை அலுவலா்கள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரராமனிடம் அளித்து கலைந்துசென்றாா்.

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும்... மேலும் பார்க்க

பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க