செய்திகள் :

பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

post image

பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஆனந்தராஜ் கோரிக்கைகளை விளக்கினாா்.

கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மூலம் தீா்வு காணாதபட்சத்தில், மனித வளத்துறை தலைமை அலுவலரிடம் முறையிடுவது. தமிழக அரசால் வழங்கப்படும் ஓராண்டு சம்பளத்துடன் கூடிய பேருகால விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புக்கான சம்பளத்தைப்போல, அவசர ஊா்தி தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா்கள் செலுத்தி வரும் மாநில சந்தா தொகைக்கான ரசீதை உடனே வழங்கிட வேண்டும். ஜிவிகே, இ.எம்.ஆா்.ஐ நிா்வாகத்தினா் போலியாக ஆவணங்களை தயாரித்து, கடிதம் வாயிலாகவும், மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மூலமாகவும் எச்சரிக்கை கடிதம் அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் ராமசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் அருகே தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலையத்துக்குள்பட்... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க