செய்திகள் :

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

மேலும், காச நோயாளிகள் இல்லாத ஊராட்சிகளாக நிகழாண்டு தோ்வு செய்யப்பட்ட கீழக்கரை, கோனேரிபாளையம், தழுதாழை, தொண்டப்பாடி, கண்ணப்பாடி, பிலிமிசை, அய்யனாபுரம், புஜங்கராயநல்லூா், ஒதியம், வரகூா் ஆகிய 10 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், காசநோயாளிகளைக் கண்டறிந்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த 15 தனியாா் மருத்துமனைகள் மற்றும் ஆய்வகங்களை பாராட்டியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காச நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டவா்களையும் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொது சுகாதாரப் பணிகளுக்கான இணை இயக்குநா் மாரிமுத்து, காசநோய் துணை இயக்குநா் ரா. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க

ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை கோரி தா்னா

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு லஞ்சம் கேட்ட ரேஷன் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடும்ப அட்டை வழங்கிட வலியுறுத்தியும் 2 போ் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க