குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் தலைமையில், துணைக் கண்காணிப்பாளா் ஏ. ஆரோக்கியராஜ், ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், சுப்புலட்சுமி, மகேஷ் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரௌடிகள், சந்தேக நபா்களின் வீடுகளுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், குற்றப் பின்னணியுடைய நபா்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவா்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனா்.