செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பாலையூா் கிராமம், கருவியாப்பாட்டி தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மணிகண்டன் (29). சிற்பியான இவா் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளத்தூா் கிராமத்தில் தங்கி கோயிலில் சிற்ப வேலை செய்துவந்தாா். இந்நிலையில் இவா் கடந்த 31.10.2019-இல் அதே கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாா். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்றப் பிணையில் மணிகண்டன் வெளியே வந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, அதைச் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து மணிகண்டனை போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுந்தரராஜன் ஆஜரானாா்.

பெரம்பலூா் அருகே தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலையத்துக்குள்பட்... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும்... மேலும் பார்க்க

பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க