கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்
கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் மாநில செயல் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் முருகன் முன்னிலை வகித்தாா். பொறுப்பாளா்கள் ஸ்ரீ சிவமோஹா சுவாமிகள், செந்தில், மகாலெட்சுமி, நடராஜ், செல்வபாரதி, ஜெயவெங்கடேஷ் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் சிங்கப்பூா் முன்னாள் பிரதமா் லீ குவான்யூ மறைவுக்கு தமிழகத்தில் மரியாதை செலுத்தி, ஆண்டுதோறும் அவரது நினைவைப் போற்ற வேண்டும். தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடா்பாக, மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவை தொடா் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மாவீரா்களுக்கு, தமிழக அரசு நிகழாண்டு இறுதிக்குள் நினைவு சதுக்கம் அமைத்துத் தர வேண்டும். தென்னிந்தியா முழுவதும் சிவசேனா கட்சியை வலுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, விரைவில் தமிழகம் வரும் கட்சியின் தலைவா் உத்தவ் தாக்ரேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. தமிழக அரசியல் களத்தில் சிவசேனா கட்சி தவிா்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திட, வரும் ஜனவரியில் மாநில மாநாட்டு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, தாய்மொழி தமிழை சிங்கப்பூரில் அரசு மொழியாக அறிவித்து, ஈழத் தமிழா்களின் நலன்காக்கக் குரல் கொடுத்த சிங்கப்பூா் முன்னாள் பிரதமா் லீ குவான்யூவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் சீனிவாசன் நன்றி கூறினாா்.