செய்திகள் :

ஜம்முவில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படையினருக்கு மீண்டும் துப்பாக்கிச் சூடு!

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த நான்கு நாள்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் இன்று (மார்ச் 27) காலை சூஃபியான் வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிராநகர் பகுதியைச் சேர்ந்த சன்யல் கிராமத்தில் கடந்த மார்ச் 23 அன்று தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் நடவடிக்கையைத் துவங்கினர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் முதல்முறையாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

பின்னர், தீவிரவாதிகளைக் கண்டறிய வீரர்களின் உத்தேச துப்பாக்கிச் சூடுகளுக்கு எந்தவொரு பதில் தாக்குதலும் வராததினால் தேடுதல் நடவடிக்கையானது விரிவடைந்தது.

மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் இந்திய ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை, ஜம்மு காவல் துறை, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகிய படைகள் இணைந்து ஹெலிகாப்டர், டிரோன், துப்பாக்கிக் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 25 அன்று ராணுவ சீருடையில் இருந்த நபர்கள் தன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு சம்பா - கதுவா பகுதியிலுள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நபர்களிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த மார்ச் 25 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 2 கையெறி குண்டுகள் மற்றும் மிகப் பெரியளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ராணுவ நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினருடன் அப்பகுதிவாசிகளும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தி, தீவிரவாதிகளின் நடமாட்டம் ஏதேனும் உணரப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு பாதுகாப்புப் படை வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் 5 அன்று மர்ஹூன் கிராமத்தில் உறவினரின் திருமணத்துக்கு சென்று திரும்பிய தர்ஷன் சிங் (வயது 40), யோகேஷ் சிங் (32) மற்றும் வருண் சிங் (14) ஆகியோர் மாயமாகிய நிலையில் ராணுவம் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் மார்ச் 8 அன்று அங்குள்ள வனப்பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியின் அருகே மூவரின் சடலமும் மீட்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், கதுவாவில் தீவிரவாதிகளினால் மூன்று உறவினர்கள் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள கதுவா மாவட்டத்தின் வழியாக கடந்த காலங்களில் தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க