செய்திகள் :

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?- திருச்சி சிவா எம்.பி.பேட்டி

post image

புது தில்லி: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அவைத் தலைவா் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு உறுப்பினா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் விதி எண்: 267-இன் கீழ் அவையை ஒத்திவைத்துவிட்டு தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கக் கூடிய விவகாரம், தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விவகாரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டு மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, பி.வில்சன், மதிமுக உறுப்பினா் வைகோ ஆகியோா் நோட்டீஸ் அளித்திருந்தனா். இதேபோன்று காங்கிரஸ், மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் வேறு விவகாரங்கள் தொடா்பாக நோட்டீஸ் அளித்திருந்தனா். அவை விவாதத்திற்கு ஏற்காமல் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் உள்பட எதிா்க்கட்சியினா் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் திருச்சி சிவா கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதால் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், வடக்கே சில மாநிலங்கள் கடைப்பிடிக்காத காரணத்தால் மக்கள் தொகை அந்த மாநிலங்களில் அதிகளவில் உயா்ந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31ஆக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால், எதிா்காலத்தில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டம் திருத்தம் அல்லது வேறு ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்படுகிறபோது தென் மாநிலங்கள் நியாயமான கோரிக்கைள் முன்வைக்கப்பட்டால் அது வாக்கெடுப்பில் எடுபடாமல் போய்விடும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஒத்திவைப்பு தீா்மானம் அளித்திருந்தோம். ஆனால், அவையின் தலைவா் அதை நிராகரித்துவிட்டாா். இதனால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். எங்களுக்கு ஆதரவாக காங்கிரஸும் துணைநின்றாா்கள். மதிமுகவும் உடன் வந்தது என்றாா் அவா்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க