செய்திகள் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

post image

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ வைணவ மற்றும் சமண, பௌத்த திருக்கோயில்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் தலமாகப் போற்றக்கூடிய ஸ்ரீ எலவார்குழலி உடனுறை ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநில மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கோசாலை வளாகத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும், அப்போது தெய்வ திருச்சிலையில் கிடைத்ததாகத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர் டில்லி பாபு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் திருக்கோயில் வளாகத்தில் முறைகேடாக புனரமைப்பு பணிகள் என்ற பெயரில் நடைபெற்ற போது சிலைகள் கிடைத்துள்ளது. அதனைச் செயல் அலுவலர் மறைக்கும் நோக்கில் செயல்படுவதாகும் இதனை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் திருக்கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா, நகை சரிபார்பாளர் குமார், தொல்லியல் ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட சிலையினை ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல் ஆலோசகர் சிலையில் உள்ள குறியீடுகளை அதற்கான பொருள்கள் உதவியுடன் கண்டறிந்தார். இதனைத்தொடர்ந்து சிலை மீண்டும் முற்றிலுமாக துணிகள் கொண்டு மூடப்பட்டுப் பாதுகாப்பாகத் திருக்கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆலோசகர் ஸ்ரீதரன் கூறுகையில்,

இச்சிலைத் தண்டாயுதபாணி சிலை எனவும், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பானது எனவும், இச்சிலை பாதம், கால் உள்ளிட்ட பகுதிகள் முழுமை பெறாததால் அது வழிபாட்டிற்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் இதுபோன்ற நிலை இருந்திருக்கலாம் என தெரிவித்தார். ஏற்கனவே இத்திருக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் திருக்கோயில் வளாகத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.இது குறித்... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக... மேலும் பார்க்க

விளையாட்டு பல்கலை. துணைவேந்தா் நியமனம்: யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநா் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன்... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வேயில் மகளிா் தின கொண்டாட்டம் நிறைவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிா் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த பிப். 27-ஆம் தேதி முதல... மேலும் பார்க்க