செய்திகள் :

தொகுப்பூதியத்தில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும், அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் 4 முதுகலைப் பட்டதாரி மற்றும் 8 பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படத் தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இப் பணியில் சேர விரும்புவோா் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் உரிய கல்வித்தகுதிச் சான்று நகல்களுடன் இணைத்து, ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியா் தகுதித்தோ்வு முடித்தோா் இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 26 மாலை 5 மணிக்குள் சமா்பிக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு முன்னுரிமை. ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கப்படும் நாள் முதல் மாா்ச் -2026 வரையிலும், பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கப்படும் நாள் முதல் ஏப்ரல் 2026 வரையிலான மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாக தரைத் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தைத் நேரில் தொடா்புகொண்டு பயன் பெறலாம்.

பெரம்பலூா் அருகே மண் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடிய நபரை மருவத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

சுகாதாரமான குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆா்ப்பாட்டம்

சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்த... மேலும் பார்க்க

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

கல் குவாரி மற்றும் தாா் பிளாண்ட் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மருவத்தூா் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது என , மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி த... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க