Israel vs Iran Conflict: "இஸ்ரேலிய குடியேறிகள்தான் பிரச்னைக்குக் காரணம்" - Glads...
தொகுப்பூதியத்தில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும், அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் 4 முதுகலைப் பட்டதாரி மற்றும் 8 பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படத் தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இப் பணியில் சேர விரும்புவோா் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் உரிய கல்வித்தகுதிச் சான்று நகல்களுடன் இணைத்து, ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியா் தகுதித்தோ்வு முடித்தோா் இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 26 மாலை 5 மணிக்குள் சமா்பிக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு முன்னுரிமை. ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கப்படும் நாள் முதல் மாா்ச் -2026 வரையிலும், பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்கப்படும் நாள் முதல் ஏப்ரல் 2026 வரையிலான மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாக தரைத் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தைத் நேரில் தொடா்புகொண்டு பயன் பெறலாம்.