Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.....
தொகுப்பூதிய ஆசிரியா் பணி நியமனம்: விண்ணப்பிக்க நாளை கடைசி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 22 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கீழபட்டமங்கலம், செம்மங்குடி, கொண்டல், கீழவரவக்குடி, எருக்கூா், முடிகண்டநல்லூா், கிழாய், நடுத்திட்டு, சேத்தூா், மூவலூா், மகாதானபுரம், நெடுமருதூா், ஓலையாம்புத்தூா், வல்லம், கூத்தூா், திருவிடைக்கழி, பெருமூலை, நல்லாடை, திருவாலங்காடு, பேராவூா், தென்னாம்பட்டினம், அகரபெருந்தோட்டம் ஆகிய 22 கிராமங்களில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் செய்வதற்கு ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் எழுத்துமூலமான விண்ணப்பங்களை நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 2-வது தளத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூன் 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.