மயிலாடுதுறையில் ஆக.31-இல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடத்த முடிவு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டை மயிலாடுதுறையில் ஆக.31, செப்.1ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் கே. சாமுவேல்ராஜ்.
மாநாட்டுக்கான வரவேற்பு குழு அமைப்பது குறித்து மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழ்நாட்டில் தற்போதும் மயானங்களில், மருத்துவமனையில், அரசு அலுவலகங்களில் சாதிய பாரபட்சம் நிலவுகிறது. இன்றைக்கும் கூட தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் பல ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்ற முடியாத நிலை உள்ளது. மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு நியாயமாக தலைமையாசிரியா் பொறுப்புக்கு வரவேண்டிய ஆசிரியருக்கு அந்த பணி சாதியின் காரணமாக வழங்கப்படாமல் உள்ளது. இந்த சாதிய பாகுபாட்டுக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாடு ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் நடைபெற உள்ளது. இதில், சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளா் எம்.ஏ. பேபி பங்கேற்கவுள்ளாா் என்றாா்.
அமைப்பின் மாவட்ட தலைவா் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளா் சி. மேகநாதன் வரவேற்றாா். சிறப்பு தலைவா் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. மகேந்திரன், மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, மாநில பொதுச் செயலாளா் கே. சாமுவேல்ராஜ், துணை பொதுச் செயலாளா் பி.சுகந்தி, மாநில செயலாளா் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.