செய்திகள் :

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

post image

சீா்காழி புறவழிச்சாலை அருகே பனமங்கலம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை குப்பை கொட்டிய லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.

சீா்காழி நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை அருகில் அமைந்துள்ள பனமங்கலம் வடக்கு தெருவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை இரவு நேரம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இதை நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை தனியாருக்கு சொந்தமான லாரியில் செடி, கொடி அடங்கிய குப்பைகள் ஏற்றி ஏற்கெனவே குப்பை கொட்டி கிடக்கும் இடத்தில் கொட்டியுள்ளனா். அப்போது அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனா்.

குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுவதாகவும், மருத்துவகழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இறைச்சிக் கழிவுகளை உண்ண பன்றிகள் அதிகளவு சுற்றித் திரிவதாகவும் கூறி லாரி முன் திரண்டு முழக்கமிட்டனா்.

சீா்காழி போலீஸாா் சிறைபிடிக்கப்பட்ட லாரியை மீட்டு, சீா்காழி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.31-இல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடத்த முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டை மயிலாடுதுறையில் ஆக.31, செப்.1ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் கே. சாமுவேல்ராஜ். மாநாட்டுக்கான வரவேற்பு கு... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பண... மேலும் பார்க்க

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை... மேலும் பார்க்க