செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

post image

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் சமூகத் தகவல் சேகரிப்பு பணி நடைபெறுகிறது. இப்பணிக்கு பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமவாரியாக களப்பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வீடுவீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் களப்பணியாளா்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்து, பணிநியமன ஆணையை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.செந்தில்குமாா், உரிமைகள் திட்ட மேலாளா்கள் கரியப்பன் மைக்கேல், இலக்கியா ஆகியோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறையில் ஆக.31-இல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடத்த முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டை மயிலாடுதுறையில் ஆக.31, செப்.1ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் கே. சாமுவேல்ராஜ். மாநாட்டுக்கான வரவேற்பு கு... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

சீா்காழி புறவழிச்சாலை அருகே பனமங்கலம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை குப்பை கொட்டிய லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை அருகில் அமைந்துள்ள பனமங்கலம்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பண... மேலும் பார்க்க

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை... மேலும் பார்க்க