செய்திகள் :

தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!

post image

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது.

மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையானது.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோரின் தலை வழுக்கையாது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாநில அரசு இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தது.

மக்கள் பயன்படுத்தும் கோதுமையில் பூச்சிகொல்லி அதிகமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இப்போது மேலும் ஒரு புதிய பிரச்னை எழுந்துள்ளது. ஏற்கெனவே தலைமுடி பிரச்னையால் பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நகம் திடீரென கழன்று விழுந்து வருகிறது. அல்லது நகம் சேதம் அடைந்து விழுகிறது.

இதையடுத்து மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இது வரை 29 பேர் தங்களது கையில் இருந்த நகத்தை இழந்துள்ளனர். இன்னும் எத்தனை பேருக்கு இது போன்று நகம் விழுமோ என்ற அச்சம் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து புல்தானா சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் அனில் கூறுகையில்,'' இது வரை ஷெகாவ் தாலுகாவில் 4 கிராமத்தில் 29 பேருக்கு நகம் சேதம் அடைந்துள்ளது. சிலருக்கு நகம் கழன்று விழுந்துள்ளது. அவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்'' என்றார்.

முடி உதிர்வு
முடி உதிர்வு

கிராம பஞ்சாயத்து தலைவர் ராம் தர்கார் இது குறித்து கூறுகையில், '' கடந்த சில நாள்களாக எங்களது கிராமத்தில் உள்ளவர்களிடம் நகம் கழன்று வருகிறது. முதல் இரண்டு நாளில் நகத்தில் விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு கீழே விழுந்து விடுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்''என்றார்.

இதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. செலினியம் அதிகப்படியாக இருப்பதால் நகம் மற்றும் முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செலினியம் பொதுவாக தண்ணீர், மண் மற்றும் சில உணவுகளில் காணப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் ... மேலும் பார்க்க

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க

Anurag Kashyap: `அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்கவில்லை எனில்..!’ - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந... மேலும் பார்க்க

Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" - அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச்... மேலும் பார்க்க

கார் 4 கோடி; நம்பர் 46 லட்சம் - கேரளாவை அசரவைத்த CEO; பின்னணி என்ன?

லிட்மஸ் சிஸ்டம்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் வேணு கோபாலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர். சமீபத்தில் இவர், கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நம்பர் பிளேட்டை ... மேலும் பார்க்க

`போலி பனீர்' ஷாருக்கான் மனைவி நடத்தும் உணவகத்தில் கலப்படம்? -யூடியூபர் புகார்; கெளரி கான் விளக்கம்

மும்பையில் பிரபலங்கள் நடத்தும் ரெஸ்டாரண்ட்மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ... மேலும் பார்க்க