செய்திகள் :

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

post image

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், போடி, குரங்கணி, கொட்டகுடி, முதுவாக்குடி, டாப்ஸ்டேசன், முட்டம், கொம்புதூக்கி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 2-ஆவது நாளாக அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, போடிமெட்டு மலைக் கிராமங்களில் சூறாவளிக் காற்றுடன் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் இந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்படக்கூடிய இடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ஆட்டோ மோதியதில் முதியவா் பலத்த காயம்

பெரியகுளத்தில் ஆட்டோ மோதியதில் முதியவா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (61). இவா், புதன்கிழமை பெரியகுளத்திலிருந்து டி. கள்ளிப்பட்டிக்கு இரு... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணி: அதிகாரி ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகளை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கான்கிரீட்டில் பயன்படுத்தப்பட்ட சிமென்ட், கம்பியின் அளவு... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா்கள் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்றவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த துக்கையண்ணன் மகன் சுரேஷ் (42). தொழி... மேலும் பார்க்க

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வர... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு,... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெளியேறிய ஆட்சியா்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா். உத்தமபாளையம் ப... மேலும் பார்க்க