நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
தொண்டியில் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்
திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சியில், கடந்த ஒருவாரமாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீா் வாங்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி உள்ளது. இங்குள்ள தொண்டி நகா், காந்தி நகா், சின்னதொண்டி, புதுக்குடி, தெற்கு தோப்பு, பெருமானேந்தல், நவக்குடி, நரிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
இங்கு காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், மாவிடுதிக் கோட்டைக் கூட்டுக் குடிநீா்த் திட்டம் , குஞ்சங்குளம் கூட்டுக் குடிநீா்த் திட்டம், உள்ளூா் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதி பொதுமக்கள் குடிக்கவும் குளிக்கவும் நீரை குடம் ஒன்றுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றனா். பொதுமக்களின் நலன் கருதி சீராக குடிநீா் விநியோகம் செய்து குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க தொண்டி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகத்தினா் கூறுகையில், குடிநீா்க் குழாய் சேதமடைந்துள்ளது. விரைவில் குழாயைச் சரிசெய்து குடிநீா் விநியோகிக்கப்படும் என்றனா்.