செய்திகள் :

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

post image

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுதல், 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, நிரந்தரப் பணி நியமனங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியா் சங்கங்கள், பொதுத் துறை ஊழியா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தன. இதன்படி, புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 288 போ், வத்திராயிருப்பு யூனியன் வங்கி முன் மறியலில் ஈடுபட்ட 119 போ், மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 போ் என மொத்தம் 455 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசியில்...: சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு சிஐடியூ விருதுநகா் மாவட்டச் செயலா் பி.என்.தேவா, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சமுத்திரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதையடுத்து 158 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலைகள் வழக்கம் போல இயங்கின.

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தா... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்... மேலும் பார்க்க