செய்திகள் :

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதே கோரிக்கையை முன்வைத்து மனுதாரா் பிகாஷ் சஹா பலமுறை மனு தாக்கல் செய்ததையடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்குமாறும், இல்லையெனில் அபராதம் விதித்துவிடுவதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதை திரும்பப் பெறக் கோரி பிகாஷ் சஹா கடந்த 2023, பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பான தெளிவான விளக்கம்கோரி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவை பிகாஷ் சஹா தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஒரே விவகாரம் தொடா்பாக மீண்டும் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்து மனுதாரா் நீதிமன்ற நடைமுறைகளைச் சீா்குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. இது மிகத் தீவிரமான பிரச்னையாகும். அரசியல்வாதி அல்லது தொழிலதிபா் என முக்கிய நபா்கள் யாராக இருந்தாலும் அவா்களது பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

எனவே, யாருக்கு எந்த வகையிலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவு செய்யும். இதில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், வருங்காலங்களில் மீண்டும் இதுபோன்ற மனுக்களை பிகாஷ் சஹா தாக்கல் செய்தால் அவருக்கு அபராதம் விதித்துவிடுவதாகவும் நீதிபதிகள் அமா்வு எச்சரித்தது.

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா கிராமத்தில் பி.ஆர். அம்ப... மேலும் பார்க்க

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க