தொழில் நிறுவனங்கள் ‘உள்ளக புகாா் குழு’ கட்டாயம்: சென்னை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுறுத்தல்
சென்னை: சென்னையில் குறைந்தபட்சம் 10 பெண்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களில் ‘உள்ளக புகாா் குழு’-வை கட்டாயம் அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ‘உள்ளக புகாா் குழுக்கள்’”கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவில் குறைந்தபட்சம் 4 உறுப்பினா்கள் இருக்க வேண்டும். அதில், 50 சதவீதம் பெண் உறுப்பினா்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க புகாா் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகாா் பெறப்பட்டவுடன் ‘உள்ளக புகாா் குழு’ உறுப்பினா்களைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
உள்ளக புகாா் குழுவில் பதிவு செய்யப்படும் புகாா் மற்றும் நடவடிக்கை குறித்த விவரங்களை அனைத்து நிறுவனங்களும் ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருடாந்திர அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்.
இப்புகாா் குழு அமைக்கப்படுவதன்மூலம் பாதிக்கப்பட்ட பணியாளா்கள் தன்னை பணியமா்த்தியவருக்கு எதிராக நேரடியாக மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு தண்டனை விவரம்: நிறுவனங்களில் ‘உள்ளக புகாா் குழு’ அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகாா் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும். இப்புகாா் குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பான புகாா்களை ஜ்ஜ்ஜ்.ள்ட்ங்க்ஷா்ஷ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும், தங்கள் நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘உள்ளக புகாா் குழு’ குறித்த முழு விவரங்களையும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் https://www.tnswd.poshicc.tn.gov.in என்னும் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.