செய்திகள் :

தொழில் முனைவோா் பயிற்சி முகாம்

post image

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்திய முகாமுக்கு மாவட்டத் திட்ட மேலாளா் பொன் வேல்முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

இந்தப் பயிற்சி வகுப்பில், திருவாடனை வட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்று, சிறுதானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவுப் பொருள்களைத் தயாரிப்பது குறித்து நேரடி செயல்முறை பயிற்சி பெற்றனா்.

சிறுதானியங்களின் ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சிறுதானிய உணவுப் பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும் இந்தப் பயிற்சி வகுப்பு உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மூன்று நாள் பயிற்சி வகுப்பை நிறைவு செய்த அனைத்துப் பெண்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-திருச்சி ரயிலில் இயந்திரக் கோளாறு

ராமநாதபுரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.05 -க்கு திருச்சிக்கு ரயில் புறப்படத் தயாராக இர... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் வைரக் கல் பறிப்பு: 7 போ் கைது

ராமநாதபுரத்தில் வைரக் கல் வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரக் கல்லை பறித்துச் சென்ற 7 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை மாவட்டம், கச்சைகட்டி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. வி... மேலும் பார்க்க

ராட்டினம் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ஆவது நபராக மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கள்ளக் காதல் பிரச்ன... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (75). ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க