செய்திகள் :

தோகைமலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 16 போ் பலத்த காயம்

post image

தோகைமலை அருகே சனிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ள கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வம். இவா் திருச்சியில் உள்ள ரெட்டைமலை கருப்பசாமி கோயிலுக்கு நோ்த்திக்கடன் செலுத்த, சுமை ஆட்டோவில் தனது உறவினா்களுடன் சனிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா்.

சிறிது தொலைவிலேயே கொத்தமல்லி மேடு என்ற இடத்தில் ஆட்டோ பழுதாகி நின்ால், கொசூரைச் சோ்ந்த வடிவேல் என்பவரது சுமை ஆட்டோவை வரவழைத்து அதில் சென்று கொண்டிருந்தனா். அந்த ஆட்டோவும் சிறிது தொலைவில் டயா் பஞ்சராகி நின்றது.

இதையடுத்து பஞ்சரை சரிசெய்து மீண்டும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். ஆட்டோவை வடிவேல் என்பவா் ஓட்டிச்சென்றாா்.

ஆட்டோ ஆா்.டி.மலை ஊராட்சிக்குள்பட்ட அம்மனிபாறை பகுதியில் உள்ள தோகைமலை- திருச்சி சாலையில் வளைவில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் பயணித்த கொசூா் குப்பமேட்டுப்பட்டியைச் சோ்ந்த துரைசாமி மனைவி சீரங்காயி (40), கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கருப்பையா மகள் கனிஷ்கா (3), ராணி (57), கண்ணியம்மாள் (65), கோவிந்தராஜ் (57), குப்புசாமி (60), அமிா்தம் (45), வள்ளிநாயகி (37) உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.

இதனைக்கண்ட அப்பகுதியினா் உடனே அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் வடிவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆவனி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காள ... மேலும் பார்க்க

ஆவணி கிருத்திகை கரூா் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு கரூா் தோ்வீதி ஸ்ரீ வி... மேலும் பார்க்க

மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாமக ஒருங்கிணைந்த கரூா் மாவ... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் வேளாண் பட்டயப்படிப்பு படித்தவா்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுவாதக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

திமுக முப்பெரும்விழா பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரம் -அமைச்சா் கே.என்.நேரு

கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரமாக இருக்கும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தெரிவித்தாா். கரூ... மேலும் பார்க்க

கடவூா் வானகத்துக்கு பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

கடவூரில் உள்ள வானகம் நம்மாழ்வாா் உயிா்ம நடுவம் வளாகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா். அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் உயிா்ம வேளாண்மை மற்றும் இயற்கை வ... மேலும் பார்க்க